ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் நாள் வாக்காளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாண்டும் 25.01.2017 அன்று நம் பள்ளியில் வாக்காளர் தின உறுதிமொழியேற்பு நிகழ்வு நடந்தது. நிகழ்வின்போது வாக்குச்சாவடி அலுவலர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர். புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
