குழந்தை நேயப் பள்ளி- ஒருங்கிணைப்பாளரின் கள ஆய்வு


28.03.2017 அன்று குழந்தை நேயப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பள்ளியை மேற்பார்வையிட வந்திருந்தார். அவரின் வரவையொட்டி பள்ளியில் அஞ்சல் திட்டம் தொடங்கப்பட்டு முதல் அஞ்சலட்டையை வெளியிட்டார்.

பள்ளியின் இசைக்குழு, அஞ்சல் திட்டம், சுட்டி விகடன் சந்தா திட்டம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்து குழந்தை நேயப் பள்ளி கூட்டமைப்பின் செயல்பாடுகளை விளக்கினார். நம் பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளை சமூகநல நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்,