தேசிய வாக்காளர் தினம்-25.01.2018

இன்று (25.01.2018) காலை 11 மணியளவில் இப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.  தலைமையாசிரியர் ராஜா அனைவரையும் வரவேற்றார். 


புதிய வாக்காளர் சேர்ப்பு, முகவரி திருத்தம் மற்றும் நீக்கல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. “நேர்மையாக வாக்களிப்போம்” என்னும் உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். இந்நிகழ்வில் வாக்காளர்கள் மற்றும் அனைத்து வாக்குச் சாவடி மைய அலுவலர்களும் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

சமத்துவப் பொங்கல் விழா

11.01.2018 மாலை 3.30 மணியளவில் நம் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி. செந்தமிழ்ச்செல்வி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் கொணர்ந்த அரிசி, வெல்லம் ஆகிய பொருட்களைச் சேர்த்து சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது. கதிரவனுக்கு படையலிட்டு நன்றி தெரிவித்தனர்.

சிறந்த பள்ளிக்கான விருது

திருச்செங்கோடு ஒன்றியம், நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளி, 2017ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இன்று(18.12.2017) காலை 11மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விழாவில், சிறந்த பள்ளிக்கான சான்றும், ரூ 50,000க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் அவர்கள் வழங்க, தலைமையாசிரியர் திரு. ராஜா பெற்றுக் கொண்டார். 


ஆசிரியர்கள் திரு. பார்த்திபன், திரு. மனோஜ்குமார், திருமதி. உமாமகேஸ்வரி மற்றும் திருமதி. ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. லோகநாதன், கிராம கல்விக்குழு தலைவர் திருமதி. விஜயலட்சுமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திருமதி. கமலம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் திரு. பாலசுப்ரமணியம் ஆகியோர் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

குழந்தைகள் தின விழா-14.11.2017

இன்று(14.11.2017) குழந்தைகள் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் இந்நாள் நம்பள்ளியின் விளையாட்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. A.J. குமரன் நினைவாக அவரது தாயார் திருமதி. உஷாதேவி அவர்கள் ரூ 20,000 வைப்புத் தொகையாக செலுத்தியுள்ள தொகைக்கு கிடைத்த வட்டித் தொகை ரூ 1439 இல் இவ்விழா கொண்டாடப்பட்டது.


காலை முதலே அனைத்து வகுப்புகளுக்குமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மிட்டாய் சாப்பிடுதல், பலூன் உடைத்தல் போன்ற போட்டிகளை மாணவர்கள் வெகுவாக ரசித்தனர். A.J. குமரன்  அவர்களின் மாமாவும், இந்திய கபாடிக் குழு வீரருமான திரு. முரளி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

மாணவர்கள் அனைவரும் வண்ண ஆடையில் கலந்து கொண்டனர். விழா நிறைவில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

NAS Exam

நம் பள்ளியில் இன்று(10.11.2017) தேசிய அளவிலான அடைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு 3 மற்றும் 5 வகுப்பில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கே.எஸ்.ஆர் கல்லூரியில் பி.எட் பயிலும் மாணவியர்களால் நடத்தப்பட்டது.

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தேர்வைப் பார்வையிட்டனர்.

குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி-03.11.2017

இன்று (03.11.2017) இப்பள்ளி வளாகத்தில் குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஏறத்தாழ 13 பள்ளிகள் கலந்து கொண்டன.



இக்கண்காட்சியில் நம்பள்ளி தொடக்க நிலையில் சிறந்த பள்ளிக்கான பரிசினைப் பெற்றுள்ளது. உயர் தொடக்க நிலையில் ப. சுதன் என்கிற மாணவன் முதல் பரிசுத் தொகையாக ரூ600 ஐ காசோலையாகவும் பெற்றுள்ளார்.

பரிசு பெற்ற மாணவருக்கும், ஒத்துழைப்பு நல்கிய அறிவியல் ஆசிரியர் திரு. மனோஜ்குமார் அவர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்!

டெங்கு விழிப்புணர்வு முகாம்-02.11.2017

இன்று (02.11.2017) காலை 11 மணியளவில் திருச்செங்கோடு நகராட்சியைச் சார்ந்த துப்புரவு ஆய்வாளர்கள் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர்.













முகாமினைத் தொடர்ந்து பள்ளி சுற்றுப்புறம் சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். சத்துணவு அறையின் மேற்புரம் தேங்கியிருந்த நீரை அகற்றினர்.